Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பா? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடத்த உள்ள இந்த ஆலோசனையில் மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கை கடுமையாக்குவதா? தளர்த்துவதா? என முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் நாளை முதல்வர் மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் தமிழகத்தில் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் நாளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சிறப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்ற நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக கொரோனா பரவலை தடுக்கலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |