Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு 2வது நாளாக ஆய்வு!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு 2வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் இரண்டாவது நாளாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகை பார்வையிட்டனர்.

550 படுக்கை வசதிகள் கொண்ட இடத்தை இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். தேவையான வசதிகள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, அவர்களுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அம்மா உணவகம், சென்னை கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

நடமாடும் காய்கறி அங்காடிகள், வெளிமாநில லாரிகள் வருகை குறித்தும் அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்தியகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆய்வு நிறைவடைந்த பின்னர் இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Categories

Tech |