ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட 40 வயது பெண் அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு அந்த பெண்ணை மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தற்காலிகமாக தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து பாதிக்கபட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் தொடர்புடைய மூன்று நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வெள்ளிக்கிழமை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட ரிஷிகேஷ் மீனா, லகான் ரீகர், கமல் கர்வால் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.