Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – சொல்ல வேண்டிய ஸ்லோகம்… செல்வம் சேர்க்கும்..!!

அட்சய திரிதியை இன்று சொல்ல வேண்டிய சுலோகம் பற்றி பார்க்கலாம்.

இன்று காலையில் அட்சய திருதியை  முன்னிட்டு  எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லி வழிபடுங்கள்.

பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள்.

இன்று  முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.

இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் உப்பு, மஞ்சள் வைத்து வழிபடுங்கள். உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

Categories

Tech |