ஊரடங்கால் வருமானம் மற்றும் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு நடிகை தமன்னா உதவி செய்து வரும் நிலையில் உறுதி ஒன்று எடுத்துள்ளார்.
இப்பொழுது இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் அனைவரும் விலங்குகளை போல் வீட்டிற்குள் அடைபட்டு இருக்கின்றனர். இக்காலகட்டத்தில் பிரபஞ்சம் நாம் அனைவர்க்கும் சில உண்மைகளையும் உணர வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஊரடங்கு மிகவும் அவசியமாகும். அதனால் இதை கடைபிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையாது.
சமூக விலகலும் மிக அவசியம், அதுமட்டுமின்றி வெளியே சுற்றுவதையும் தவிர்க்க வேண்டியது ரொம்ப முக்கியம். கொரோனாவுக்கு நிறைய உயிர்களை இழந்துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கிறது. சிறு தொழில்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கும், விலங்குகளுக்கும் எதிராக நாம் அனைவரும் செயல்பட்டதற்கு இந்த பிரபஞ்சம் நமக்கு பெரிய பாடத்தை கற்று கொடுக்கிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் பசியால் யாரும் தூங்க செல்லக்கூடாது என்ற உறுதியை நான் எடுத்து இருக்கிறேன். அதற்காக தொண்டு அமைப்புடன் இணைந்து தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறேன். இந்த நேரத்தில் கஷ்டப்படுவோருக்கு உதவுவதற்கு நன்கொடை அளியுங்கள். உங்களை பற்றி மட்டும் நினைக்காமல் எல்லோருடைய நலனை பற்றியும் சிந்தியுங்கள்.