Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு-“யாரும் பசியோடு தூங்க கூடாது”…ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமன்னா..!!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படும் சிலருக்கு நடிகை தமன்னா உதவி செய்திருக்கிறார்.

மும்பை குடிசை பகுதியில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்தோடு  சேர்ந்து  50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை நடிகை தமன்னா வழங்கியிருக்கிறார்.

இதை பற்றி அவர் கூறியதாவது; ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நல்ல நடவடிக்கை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகலாம், இதனால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தினமும் வேலை செய்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். யாரும் பசியோடு தூங்க கூடாது என்று முடிவெடுத்து அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய எல்லோரும் தாராளமாக நன்கொடை அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நடிகை தமன்னா 3 லட்சம் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |