அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஏற்பட்டுள்ளது .
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதியை சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
இதையடுத்து இன்று காலை அதிமுக_வின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது .அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது . இதற்காக அதிமுக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாலை 6 மணிக்கு அதிமுக தலைமையகம் வந்தனர். இதையடுத்து மாலை 6.30 வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் தொடர்ந்து வெளியாகவிலை.
இந்நிலையில் அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முடிவாகிவிட்டது என்றும் , 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றதாக தெரிகின்றது. திமுக நாடாளுமன்ற மற்றும் 18 சட்ட பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகிய நிலையில் தற்போது இந்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் 18 சட்ட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடன் இன்று தான் நேர்காணல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.