திருமணத்திற்காக ஏங்கி தவம் இருப்பவர்கள், 9 வாரம் நரசிம்மருக்கு விரதம் இருந்து தீபம் ஏறுங்கள்.
பொதுவாக சிலபேரை செவ்வாய் தோஷம்தான் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை உண்டாக்குவது செவ்வாய் தோஷம் தான் என்று நிறையப் பேர் கூறுகிறார்கள். அதனால் அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். இவ்வாறு செவ்வாய் தோஷத்தால் பாதிப்பு அடைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி, 9 வாரம் நரசிம்மரை வழிபட்டு வந்தால் தோஷம் எளிதாக நீங்கி விடும். 9 வாரம் விரதம் இருந்து நரசிம்மருக்கு யார் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கக்கூடிய குறைகள் தீர்ந்து விடும். குறிப்பாக திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடியுங்கள், உங்களுக்கு கைமேல் பலன் வந்து சேரும்.