Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக அதிகரிப்பு… 5ம் இடத்தில் தமிழகம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 3,252 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,666 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,081, குஜராத் – 1,939, ராஜஸ்தான் – 1,576, தமிழகத்தில் 1,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 5ம் இடத்திற்கு பின்னோக்கியுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதித்த 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. மேலும் மத்தியபிரதேசம் – 1,485, உ.பி – 1,184, தெலுங்கானா – 873, ஆந்திரா – 722 பேர், கேரளா – 408, கர்நாடகா – 408, மேற்கு வங்காளம் – 392, காஷ்மீர் – 378, புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |