Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்க… ஒரு புது கண்டுபிடிப்பு… அசத்திய அறிவியலாளர்கள்!

பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனா வைரசுக்கு  எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லாமாக்கள்  (llama) எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் மிகவும் நெருங்கி வருவதாக கருதப்படுகிறது.

பெல்ஜியத்தின் Ghent நகரில் உள்ள உயிரித் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் அறிவியலாளர்கள், லாமா என்ற விலங்குகளின் இரத்தத்தில் இருக்கும் மூலக்கூறுகள் கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படலாம் என்று நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்கள். ஆனாலும், அந்த மூலக்கூறுகளை கொரோனா தொற்றுக்கு மருந்தாக பயன்படுத்த மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லாமாக்களின் இரத்தத்தில் உள்ள இந்த ஆன்டிபாடிகள் முதலில் எச்.ஐ.வி சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்த ஆன்டிபாடிகள் மெர்ஸ் (MERS) மற்றும் சார்ஸ் (SARS) ஆகிய வைரஸ்களின் சிகிச்சையில்  பலனளிக்கக்கூடியவை என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே கொரோனாவையும் இந்த ஆன்டிபாடிகள் அழித்துவிடும் என்று நம்புவோம்..

Categories

Tech |