Categories
தேசிய செய்திகள்

கொரோனவை விரட்ட இப்படிலாம் பண்ணாதீங்க…. மத்திய சுகாதாரத்துறை வேதனை …!!

மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்க கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது. அவ்வகையில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது அரசு. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த வீடு, தெரு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோன்று தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் மக்கள் மீது கிருமிநாசினி இயந்திரம் மூலமாக தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கக் கூடாது அதில் இருக்கும் ரசாயனம் அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கக்கூடும் எனவே மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது கிருமிநாசினி தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |