Categories
அரசியல்

எல்லாம் எப்படி போகுது ? முதல்வரிடம் கேட்டறிந்த மோடி …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநில அரசாங்கங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் இந்த காணொளியில் ஆலோசனை நடத்தி மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசிஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் எந்த அளவு இருக்கும் என்று கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. தமிழக முதலமைச்சரும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தததோடு தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் கிட்டுகளை வழங்கமுதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்திருந்த நிலையில் பிரதமரும் துரித பரிசோதன கருவிகளை அதிகமாக கொடுப்பதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |