Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நாய்… யோசிக்காமல் உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்கள்!

அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை இரு  இளைஞர்கள் தாங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஒரு பாலத்தில் 26 வயதான சாமுவேல் ரெயிஸ் (Samuel Reyes) என்பவர் வழக்கம்போல நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார் சாமுவேல். இதையடுத்து சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்த சாமுவேல் நாயை இறுகப் பிடித்துக் கொண்டார்.

பின்னர் ஆற்று வெள்ளத்தின் போக்கில் அவர் சென்று கொண்டிருந்தபோது, சாமுவேலின் துணைக்கு மற்றொரு இளைஞரும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்தார். பின்னர் இருவரும் நாயை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இளைஞர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நாயை காப்பாற்றியதற்கு அப்பகுதிமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |