Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா… 37 பேர் டிஸ்சார்ஜ்…. அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இன்று  38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை  ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியீட்டது. தற்போது கொரோனா பாதித்த மாநிலங்களில் 3வது இடம் வகிக்கும் தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி 31 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,204  ஆக இருந்தது..

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ல் இருந்து  1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர்.. இதனால் தமிழகத்தில் இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது” என்று கூறினார்..

 

Categories

Tech |