Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா… மொத்தம் 1,204 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது.. இதனை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில், நேற்று தமிழக அரசு ஏப்ரல் 30 ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து இன்று உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்பார்த்ததை போலவே நாடு முழுவதும் ஏப்ரல் 3 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்தார்.. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 98 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் மாலை வழக்கம் போல செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் இன்று 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173ல் இருந்து ஆக 1,204 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

மேலும் 28,711 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 135 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 68,519 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் 19,255 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. இன்று மட்டும் 6,509 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |