Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் இன்று  98 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1,173 அதிகரித்துள்ளது. இதுவரை  58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |