Categories
பல்சுவை

லண்டனை நடுங்க வைத்த இந்தியன்…ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த தேசப்பற்று…!!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்து இந்திய வீரன் உத்தம் சிங் பற்றிய தொகுப்பு.

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஆங்கில ஜெனரல் டயரை நமக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் சம்பவம் 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் கொலை உயிருமாக துடித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தால் மொத்தம் 1550 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் விழுந்தவுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள் நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால் அதிக நேரம் சுட்டு இருப்பேன் என்று வெளிப்படையாக தெரிவித்தார் ஜெனரல் டயர். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கை ஜெனரல் டயரை வெற்றி நாயகன் என்று பாராட்டி எழுதியது. ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியாவை உலுக்கியது.

அந்த பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரை பழிவாங்குவேன் என்று உத்தம் சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான். சொன்னபடி சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி கவர்னர் கவர்னர் ஓ டயரை சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதை பைத்தியக்காரத்தனமான செயல் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். நேரு மற்றும் பலர் கலந்து பஞ்சாப் காங்கிரஸ் அரசு உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் செய்துவைத்தனர். இதனை கடுமையாக எதிர்த்தும் சிங்கின் செயலை பாராட்டியும் கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு நேருவின் சதியால் காந்தியால் நேதாஜி காங்கிரசிலிருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில் உத்தம் சிங்கிற்கு தூக்கு தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம் தூக்கில் போட்டவுடனே இங்கிலாந்து மண்ணிலேயே என்னை புதைத்து விடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்தியாவை இங்கிலாந்து ஆண்டது போல் இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும் என்று முழங்கினார் உத்தம் சிங்.

ஜூலை 31 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார். தியாக சிங்கம் என அழைக்கப்பட்ட அவர் உடல் சீக்கிய மத சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் எஸ் சாது சிங் உத்தம் சிங்கின் எலும்புகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி மிச்சம் மீதி எழும்புக் கூடுகளை பொறுக்கி இந்தியாவிற்கு அனுப்பியது. உத்தம்சிங் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு உத்தம் சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்ட சாம்பல் டைரக்டர் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது தேசத்தை நேசிக்கும் அனைவரும் உத்தம் சிங்கின் தியாகத்தைப் போற்றுவோம்.

Categories

Tech |