கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ” தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இனியும் காலதாமதம் செய்யமால் விரைவில் முடிவு செய்ய வேண்டும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்துக்குத் தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எம்எல்ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் பீரியட்தான்; அதைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். தனித்திருத்தல் மட்டும் தான் மக்களால் செய்ய முடிந்தது; மற்ற அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்ய வேண்டும். கரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனை தர, ஒத்துழைக்க, உதவி வழங்க திமுக தயாராக உள்ளது என அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.