Categories
தேசிய செய்திகள்

குஜராத் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் கொரோனா நோய்த்தொற்றால் 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளுக்குநாள் கொரோனா பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இன்று 55 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 241ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று அகமதாபாத்தில் 48 வயது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளதால் அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

 

Categories

Tech |