இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் 4,789 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 124 பேர் பலியாகியுள்ள நிலையில், 353 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 ல் இருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது.