Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா அச்சம் எழுந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 11 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார். இதனால் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் இந்த தகவல் சற்று ஆறுதலை தந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 5,305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 14,000 சோதனை கருவிகள் தயார் நிலையில் உள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |