Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571ல் இருந்து 621 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 6ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |