கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் மக்கள் கூட்டமாக கூடி பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் அரசு கடைபிடிக்க சொன்ன சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது. இதில் 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 292 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.