தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
![]()
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் மற்றவர்கள் கிட்டதட்ட 31 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 91 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக திண்டுக்கல்லில் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :
|
மாவட்டம்
|
சிகிச்சை பெற்று வருபவர்
|
| சென்னை | 91 |
| திண்டுக்கல் | 43 |
| திருநெல்வேலி | 37 |
| கோவை | 33 |
| ஈரோடு | 27 |
| நாமக்கல் | 24 |
| தேனி | 23 |
| ராணிப்பேட்டை | 22 |
| கரூர் | 22 |
| திருச்சிராப்பள்ளி | 18 |
| மதுரை | 17 |
| செங்கல்பட்டு | 15 |
| விழுப்புரம் | 14 |
| திருவாரூர் | 12 |
| விருதுநகர் | 11 |
| திருவள்ளூர் | 11 |
| திருப்பத்தூர் | 10 |
| தூத்துக்குடி | 9 |
| சேலம் | 9 |
| சிவகங்கை | 5 |
| நாகப்பட்டினம் | 5 |
| கன்னியாகுமரி | 5 |
| வேலூர் | 4 |
| காஞ்சிபுரம் | 4 |
| திருப்பூர் | 3 |
| கடலூர் | 3 |
| திருவண்ணாமலை | 2 |
| ராமநாதபுரம் | 2 |
| கள்ளக்குறிச்சி | 2 |
| தஞ்சாவூர் | 1 |
| பெரம்பலூர் | 1 |