Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கையை சிவக்க வைக்கும் மருதாணி…. இதய நோயையும் தடுக்குமாம்…!!

பெண்கள் அழகுக்காக கைகளில் வைக்கும் மருதாணியின் சில மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு.

  • தீக்காயத்திற்கு மருதாணியை அரைத்து வைப்பதனால் எரிச்சல் நீங்கும், வலி குறைந்துவிடும், பெரிய அளவில் தழும்புகள் உருவாவதையும் தடுக்கும்.
  • மருதாணியை நன்றாக அரைத்து நெற்றியில் தடவிவர கடும் தலைவலியும்  காணாமல்பறந்து  போகும்.
  • தேங்காய் எண்ணெயுடன் சரியான அளவு மருதாணியை சேர்த்து நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வருவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.
  • மருதாணியை பெண்கள் கைகளில் வைப்பதால் கைகள் மிருதுவாகும், உடலின் சூடு குறையும், மன அழுத்தம் காணாமல் போகும்.
  • மருதாணியில் இருந்து எண்ணெய் எடுத்து அதனை தலைக்கு தேய்த்து வருவதால் தலையில் இருக்கும் நரம்புகள் குளிர்ச்சியாகி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கின்றது.
  • மருதாணியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி வருவதனால் கல்லீரல் பித்தப்பையில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறிவிடும்.
  • மருதாணியை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து சீராக இருக்கும். இதயம் தொடர்பான நோய் ஏற்படுவதையும் தடுக்கும்.
  • உடலில் ஏதேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் ஏற்பட்டால் மருதாணி எண்ணையை தடவிவர வீக்கம் விரைவில் காணாமல் போகும்.

Categories

Tech |