தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
- அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்கள் வளர்ச்சி பெற்று அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் இதனால் நாள் முழுவதும் சோர்வாகாமல் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.
- உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தினமும் அதிகாலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் நீர்சத்து அதிகரிக்கும்.
- தினமும் காலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் .
- அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடை எளிதில் குறையும்.
- தினமும் அதிகாலை தண்ணீர் அருந்துவதால் உடலில் இருக்கும் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும்.
- தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வருவதால் குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். குடல் சுத்தமாக இருக்கும்.