இங்கிலாந்தில் ஒரு பராமரிப்பாளர் 99 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தில் வசிக்கும் 99 வயது மூதாட்டிக்கு ஞாபகமறதி நோய் இருக்கிறது. எனவே, Black Bull என்ற பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரின் உறவினர்கள் அவரை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது, மூதாட்டியின் செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள் இருந்திருக்கிறது.
எனவே, சந்தேகமடைந்த அவர்கள், உடனடியாக கண்காணிப்பு கேமராவை அறையில் ரகசியமாக பொருத்தியிருக்கிறார்கள். அதில் Phillip Carey என்ற 48 வயதுடைய பராமரிப்பாளர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இதனால் பதறிய உறவினர்கள் உடனடியாக இது குறித்து புகார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். அவருக்கு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மூதாட்டியின் உறவினர்கள் கூறுகையில், சில தினங்களாகவே அவரின் செயல்பாட்டில் மாற்றம் இருந்தது. எனவே, அறையில் கேமராவை பொருத்தினோம். ஆனால் பராமரிப்பாளர் இப்படி செய்வார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.