பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை நடிகை சுவாசிகா சாடியுள்ளார்.
சமீப காலமாகவே மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் படம் வாய்ப்பு தருவதற்கு படுக்கை அறைக்கு அழைப்பதாகவும் நடிகைகள் சிலர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த தொல்லைகளில் இருந்து பாதுகாப்பதற்காக நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி, ரேவதி உள்ளிட்டோர் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் இந்த சங்கத்தை நடிகை சுவாசிகா விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, மலையாளத் திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கின்றது. இங்கே பெண்களை படுக்கையறைக்கு வர சொல்லி யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றால் தைரியமாக நிராகரிக்கலாம். யாரும் வற்புறுத்த மாட்டார்கள்.
இரவு நேரத்தில் யாரேனும் உங்கள் அறை கதவை தட்டினால் நீங்கள் திறக்காமல் யாரும் உள்ளே வர முடியாது. இதையும் மீறி ஏதேனும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் காவல் நிலையத்திற்கு அல்லது மகளிர் ஆணையத்திலோ புகார் கூறலாம். சினிமா பெண்கள் நல அமைப்பில் புகார் செய்ய தேவையில்லை. அந்த அமைப்பின் மூலமாகத்தான் நீதி கிடைக்கும் என்ற உறுதி இல்லை என தெரிவித்துள்ளார்