திருப்பத்தூர் மாவட்டத்தில் 3கோடியே 11 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2019 2020 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டி வழங்கினர். முதற்கட்டமாக 277 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 3 கோடியே 11 லட்சம் மதிப்பில் 9 ஆயிரத்து 96 விலையில்லா மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. விழாவில் பேசிய அமைச்சர் கே சி வீரமணி மாணவர்கள் அரசு சலுகையை பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.