இந்தியாவில் ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு திட்டத்தின் கீழ் ராணுவ தண்டவாளங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஜான்சி நகரில் உள்ள தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தண்டவாளங்களை முப்படைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இலகு ரக ஹெலிகாப்டரை இந்திய விமானப்படைக்கு வழங்கினார். அதுமட்டுமில்லாமல் இந்திய கப்பற்படையில் உள்ள கப்பல்களுக்கு நவீன மின்னணு போர் கருவிகள் மற்றும் இந்திய ராணுவத்துக்கு ஆளில்லா விமானங்கள் போன்றவற்றை பிரதமர் வழங்கினார். அதன் பிறகு பேசிய ராணுவ மந்திரி, “இந்திய நாட்டின் பாதுகாப்பு சாதனங்களில் 90% நம் நாட்டிலே தயாரிக்கும் நாள் விரைவில் வரும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார் கூறினார்.