20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் பாபா திரைப்படம் உருவாகின்றது.
அண்ணாமலை, பாட்ஷா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரும் ரஜினியும் மூன்றாவது முறை இணைந்து வெளியான திரைப்படம் பாபா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இருபது வருடங்களுக்குப் பிறகு பாபா திரைப்படம் மீண்டும் திரைக்கு வர உள்ளது.
இத்திரைப்படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உட்பட பல டிஜிட்டல் அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தற்போது வெளியாகும் பாபா படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு புது அனுபவம் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளார்கள்.