ஜோதிகா 21 வருடங்களுக்குப் பிறகு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா ஹிந்தியில் முதல்முறையாக டோலி சஜா கே ரக்கீனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1997 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கு பிறகு 2001 ஆம் வருடம் வெளியான லிட்டில் ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதன் பிறகு ஜோதிகா இந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த திரைப்படம் ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலாதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் தொழிலதிபர் வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கின்றார், துஷார் இத்ரானே இயக்குகின்றார். இந்த நிலையில் இப்படத்தில் ஜோதிகா ஹீரோயினாக நடிக்கின்றார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.