வதந்தி வெப்தொடர்க் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது.
போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார் என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் முடிந்த பிறகு அவர்களை சிந்திக்கவும் வைக்கும். இந்த தொடர் அதன் இறுதி வரை ரசிகர்களை கட்டுண்டு கிடக்கச் செய்யும் என கூறியுள்ளார்கள்.