Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! துளு மொழியிலும் வெளியாக இருக்கும் காந்தாரா… படம் குறித்து வெளியான தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் துளு மொழியிலும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.

ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப் கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் வசூலையும் குவித்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |