தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகின்றது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளி) காலை 10:30 மணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கின்றது.
இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் பங்கேற்கலாம். இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும்போது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்த ஆகாது. தனியார் நிறுவனத்திரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.