மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மகேந்திரன் என்பவருக்கும் தீபா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். காப்பகத்திற்கு வெளியே இருக்கும் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு திருமண பரிசாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணை வழங்கி அவர்களை சந்தோஷபடுத்தினார். மணமக்களுக்கு மனநல காப்பகத்திலேயே 15000 ரூபாய் சம்பளத்தில் வார்டு மேலாளர் பதவியை வழங்கி ஒளியேற்றியுள்ளார்.