நடிகர் மகத் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத்ராகவேந்திரா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது சத்ரம் மணி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகின்றார். இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள்.
இத்திரைப்படம் குறித்து மகத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது, சினிமா என்பது பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் இருக்கும் ஒரு தாக்கத்தை உருவாக்கும் காரணி என நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாகவே ஹிந்தி பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் ஸ்கிரிப்டை படித்தபோது இந்த கதை எனக்கான படம் என தெரிந்தது.
இதனால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் என்னை நடிக்க வைக்க எண்ணியதற்கு இயக்குனருக்கு நன்றி. எனக்கு தெரிந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலை பற்றி வெட்கப்படுகின்றார்கள். அது குறித்து இத்திரைப்படம் கேள்வி கேட்கின்றது. இதில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குனர் மற்றும் சக நடிகர்களுக்கு அற்புதமான அனுபவம் எனக் கூறியுள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.