வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது.
பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். சாம் சி.எஸ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ராதாகிருஷ்ணன் மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் பூஜையானது நேற்று காலை சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். இந்த படத்தின் படபிடிப்பானது நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.