Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ராமாயணத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்”…. அல்லு அர்ஜுன் ஓபன் டாக்….!!!!!!

ராமாயணத்தை எடுத்தே தீருவேன் என்பதில் அல்லு அர்ஜூன் உறுதியாக உள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது கனவு திரைப்படமாக மகாபாரதத்தை அறிவித்திருக்கின்றார். இதுபோல அல்லு அர்ஜுன் தனது கனவு திரைப்படமாக ராமாயணத்தை அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிப்புருஷ் என்ற திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால் அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் திரைப்படம் கைவிடப்படவும் இல்லை, நிறுத்தவும் இல்லை. ஒன்றரை வருடமாக தயாரிப்பு பணிக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றது. இன்னும் ஆறு மாதத்திற்கு இப்பணிகள் நிறைவடைந்து அடுத்த வருடம் படப்பிடிப்பு ஆரம்பமாகும். இத்திரைப்படம் இந்தியாவிலேயே பெரிய திரைப்படமாகவும் பெரிய பட்ஜெட்டில் எடுத்த திரைப்படமாகவும் இருக்கும். ராமாயணம் திரைப்படத்தை நாங்கள் எடுக்கப் போவதாக 500 கோடி. தற்போது இந்த மதிப்பீடு மேலும் அதிகரிக்கும். இரட்டிப்பானாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. ஆனால் இப்படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |