Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “பாதுகாப்பு கருதி திருத்தணியில் 300 போலீசார் குவிப்பு…!!!!!

திருத்தணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தியா முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப் பட இருக்கின்றது. இதனால் திருத்தணியில் மக்கள் கடைகளுக்குச் சென்று இனிப்புகள், பட்டாசுகள், புதிய ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்து வருகின்றார்கள். பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனால் மக்கள் அதிகமாக கூடும் 14 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. முக்கிய இடங்களாக கருதப்படுவதாவது, முருகன் கோவில் மலைப்பாதை, அண்ணா பேருந்து நிலையம், சித்தூர் சாலை சந்திப்பு, ஆர் கே பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் திருத்தணி உட்கோட்டத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.

Categories

Tech |