சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும்.
கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு பொதுமக்களை காப்பாற்றுவது என செயல் விளக்கம் காட்டப்பட்டது. இதற்கு நிலைய அலுவலர் பரமசிவம், முன்னணி தீயணைப்பு வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.