Categories
தேசிய செய்திகள்

8 மாத குழந்தைக்கு தாயாக மாறிய செவிலியர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிர்மல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி 8 மாத குழந்தையுடன் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தனர். குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பைன்சா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மகேந்தர் என்பவர் அந்தத் தம்பதியை கவனித்து வந்தார். இந்நிலையில் 8 மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை கண்ட அவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கும் தனது மனைவி சுதாவிடம் கூறியுள்ளார்.

அவரது மனைவியும் எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தையை வீட்டிற்கு தூக்கிச் சென்று தாய்ப்பால் கொடுத்து பராமரித்து வந்த நிலையில், குழந்தைக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையை நன்கு கவனித்து வந்தார். தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து தம்பதி மீண்ட நிலையில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் தாயுள்ளம் கொண்ட செயலைக் கண்ட அப்பகுதி மக்கள், செவிலியரை  மனதார பாராட்டினார்.மேலும் அந்த குழந்தைக்கு 10 நாட்கள் தாய்ப்பால் கொடுத்து அந்த செவிலியர் அரவணைப்புடன் பார்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |