வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்திருக்கின்றார். பபிதா ரோஸ் அவரிடம் 10 லட்சம் வாங்கி பணப்பரிவர்த்தனை பெற்று இருக்கின்றார். இதனால் முருகேசன் தனக்கு வர வேண்டிய மொத்தம் 21 லட்சத்தை பபிதாவிடம் கேட்ட பொழுது கொலை மிரட்டல் விடுத்ததோடு தகாத வார்த்தைகளால் பேசி இருக்கின்றார்.
இதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பபிதா ரோஸை தேடி வந்தார்கள். மேலும் திருநங்கை வீட்டில் தச்சு வேலை செய்த ஜார்ஜ் ஆண்டனி தனக்கு ஒரு லட்சம் தராமல் மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து தகவலறிந்த பபிதா ரோஸ் தலைமறைவானார். இந்த நிலையில் சென்ற 27ஆம் தேதி தலைமுறைவாக இருந்த பபிதா ரோசை போலீசார் கைது செய்தார்கள். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தது.
பபிதா ரோஸ் தான் ஒரு ஜமீன் வாரிசு எனவும் சப் கலெக்டராக பணி புரிவதாகவும் தனது சகோதரர்கள் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதாகவும் திரைப்பட துறையில் ஆர்வம் இருப்பதாகவும் கூறி பலரை ஏமாற்றி இருக்கின்றார். மேலும் பல மாவட்டங்களில் இருக்கும் பல ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம், நகைகளை மோசடி செய்திருக்கின்றார். இதுவரை இவர் எட்டுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றி இருக்கின்றார். மேலும் அவர்களிடம் திருமணம் செய்த புகைப்படத்தை காட்டி குடும்பத்தாரிடம் தெரிவித்து விடுவதாக அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்திருக்கின்றார்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தால் தங்களின் மானம் போய்விடும் என புகார் தராமல் இருந்திருக்கின்றார்கள். இதை பயன்படுத்தி பபிதா தனது கைவரிசையை காட்டி இருக்கின்றார். இந்த நிலையில் சிறப்பு காவல் படை காவலராக பணிபுரியும் கார்த்திக் என்பவரின் மனைவி நித்யா சென்ற 17ஆம் தேதி திருநங்கையால் பாதிக்கப்பட்ட சிலருடன் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டிடம் நேரில் சென்று புகார் மனு கொடுத்திருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து பபிதா ரோசை விசாரணைக்கு அழைத்தபோது இரவு ஆகிவிட்டதால் மறுநாளை காலை விசாரணைக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் 19ஆம் தேதி சிறப்பு காவல் படையில் பணிபுரியும் காவலர் கார்த்திக் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 பவுன் நகை மற்றும் 4 1/2 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டதாக புகார் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிந்தது. ஆகையால் பபிதா ரோஷிடம் தொடர் விசாரணை நடத்தினால் பல தகவல்கள் வெளியாகும் என போலீசார் கூறியுள்ளார்கள்.