அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn gov.in என்ற இணையதளத்தின் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.