இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் மறந்து வேலை பார்ப்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அதிக அளவில் பருகும் பானம் டீ ஆகும். டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
- அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள் கூட டீ குடிப்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளனர். வேலையின் இடைவேளை அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் அவர்கள் டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்.
- அதிகமாக டீ குடித்தால், அதில் இருக்க கூடிய, அதிக அளவிலான நச்சுக்களால் நம் உடலில் கவன சிதறல், அமைதி இல்லாமல் போக செய்வது, தூக்கம் இல்லாமல் போவது, மனம் அலைபாய்ந்து கொண்டு இருக்கும், ஒரு நிதானம் இல்லாமல் இருக்க கூடும்.
- டானிஸ் என்னும் வேதிப்பொருள் டீ ல் இருக்கிறது. எனவே டீ அதிகம் பருகவதால் உடலில் இரும்புச்சத்து சேரவிடாமல் அதன் தன்மையை தடுத்து விடும். புற்றுநோய்க்கு முக்கியமான ஒன்றாக கொடுக்கப்படும் ஹீமோதெரபி , சிகிச்சை பலன் அளிக்காமலும் போக வாய்ப்புள்ளது. காரணம் என்ன வென்றால் நாம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாமல், அதன் தன்மையை செலயலிழக்க செய்து விடும்..
- ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது.
- பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
- புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. டீ-யில் டோனிக் அமிலம் உள்ளது.
- இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை உண்டாக்க காரணமாகிறது.