Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. மூவர்ண நிறத்தில் இனிப்புகள்…. ராணுவ வீரர்களுக்கு ஆஃபர் கொடுத்து அசத்தல்….!!!!

தேசியக்கொடி வண்ணத்தில் செய்யப்பட்ட இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு குஜராத் மற்றும் சூரத்தில் உள்ள இனிப்பகங்களில் மூவர்ண நிறத்தில் இனிப்புகள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும் சூரத்தில் உள்ள இனிப்பகம் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஓய்வு நாள் முழுவதும் 50% சலுகையில் இனிப்புகள் வழங்கப்படும் என அந்த கடை அறிவித்துள்ளது.

Categories

Tech |