தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிர்வாகத்தை தொடங்கும் நோக்கத்திலும்”புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்”தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும் ஆண்டு வருமானம் உச்சவரம்பு எதுவும் இல்லை. உங்க திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் குறைந்தது மூன்று வருடங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மேலும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் முதல் அதிகபட்சம் 5 கோடி வரை கடன் பெற்று 25 அதிகபட்ச மானியம் 75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பட்டியலின குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதல் மானியமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, CNC லேத் இயந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் இயந்திரங்கள், பேப்பர் போர்ட்இ பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்,பெண்), ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் துவங்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர் 8925534036 என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.