Categories
அரசியல் மாநில செய்திகள்

75 நாட்களில் மானம் போச்சு…. இது அரசுக்கு ஏற்பட்ட களங்கம்…. புலம்பும் எடப்பாடி தரப்பு …!!

கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளில் 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 127 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் இதுவரை சுமார் 6 இலிருந்து 7 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

7 கிலோ தங்கம்,  9 கிலோ வெள்ளி,  வைரம் தொடர்பானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது மட்டுமல்லாமல் சார்பதிவாளர் அலுவலகங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், சுற்றுச்சூழல் துறை அலுவலகம் என அரசு அலுவலகங்களில் கடந்த மூன்று மாதத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்க கூடிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் அரசு ஊழியர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை அரசுக்கு களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் எடுத்துச் செல்லும் என்பதால் ஆளும் தரப்புக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |