Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

75 கோடி செலவில் பாலம் திறப்பு

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காமம் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக சாலைப்போக்குவரத்து பாலத்தில் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் தூரத்தில் பாலம் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |