Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தின விழ….. சென்னையில் 2வது நாள் ஒத்திகை….. போக்குவரத்து மாற்றம்….!!!

75 வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதால் அதனை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

75வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 6, 11 , 13 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று காலை முதல் காவல்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |